பிரபாகரன் இறந்துவிட்டார்; கஜேந்திரகுமாரின் வழியில் தமிழ் மக்கள் பயணிக்க வேண்டும்: ஆனந்தராசா

“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார். ஆகவே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் மக்கள் அரசியல் தீர்வுக்காக பயணிக்க வேண்டும்” என்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா தெரிவித்துள்ளார்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ‘மே’ தினக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே ஆனந்தராசா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

-http://4tamilmedia.com

TAGS: