ஹரப்பான் பரப்புரைகளில் கலந்துகொள்ளும் அம்னோ மூத்த உறுப்பினர்களுக்கு கூ நான் எச்சரிக்கை

அம்னோ   மூத்த  உறுப்பினர்கள்    எதிரணி  பரப்புரைகளில்     கலந்துகொள்வதையோ    அதற்கு   ஆதரவளிப்பதையோ    பிஎன்   பொறுத்துக்கொள்ளாது.

இதனைத்   தெரிவித்த      அம்னோ    தலைமைச்   செயலாளர்     தெங்கு   அட்னான்   தெங்கு   மன்சூர்,     அவர்களுக்கு    எதிராக    நடவடிக்கை    எடுப்பதற்குமுன்     அம்னோ   மூத்தோர்   எந்த    அளவுக்கு   எதிரணியுடன்   கூடிக்  குலவுகிறார்கள்    என்பதை     பிஎன்    ஆராயும்    என்றார்.

“சில   நேரங்களில்     அவர்கள்     அரசியல்வாதியாக    அல்லாமல்     ஒரு    நண்பனாகத்தான்    அவர்களின்  நிகழ்வுக்குச்     செல்வதாகக்    கூறுவார்கள்.  அதுதான்   பிரச்னை.   ஏனென்றால்     நாம்  எல்லாருமே     நண்பர்கள்தாம்.

“ஆனால்,  கட்சி     நெறிமுறைகளை  மீறினால்     அவர்களுக்கு    எதிராக     நடவடிக்கை     எடுக்கப்படும்”,  என்றாரவர்.

மலாக்காவில்   ஒரு   செராமாவில்     பேசிய   பிகேஆர்   மலாக்கா    தலைவர்   ஷம்சுல்    இஸ்கண்டர்   முகம்மட்   அகின்,    முன்னாள்    அமைச்சர்   டயிம்   சைனுடினைப்   பின்பற்றி   ரபிடா    அசிசும்   எதிரணிப்  பரப்புரையில்     கலந்துகொள்ளக்கூடும்    என்று   கூறியது  குறித்துக்   கருத்துரைத்தபோது     தெங்கு   அட்னான்   அவ்வாறு    குறிப்பிட்டார்.     ,