மகாதிர்: 93 வயதிலும் ஒரு மணி நேரம் என்னால் பேச முடிகிறது

மே  9   வாக்களிப்பு     நாள்.   அதுவரை   பக்கத்தான்   ஹரப்பான்   தலைவரும்  லங்காவி   நாடாளுமன்றத்    தொகுதி    வேட்பாளருமான    டாக்டர்   மகாதிர்    முகம்மட்    தேர்தல்    பரப்புரையை   நிறுத்தப்போவதில்லை.

“குவாந்தானில்   ஒரு   மணி    நேரம்    பேசினேன்….முன்பெல்லாம்    அனாயசமாக  ஒரு  மணி   நேரத்துக்குப்   பேசுவேன். அது   இளமைக்  காலம்”,  என   இன்று   புத்ரா  ஜெயாவில்     செய்தியாளர்    கூட்டத்தில்   மகாதிர்   கூறினார்.

“இப்போது   வயதாகி   விட்டது.  ஆனாலும்   ஒரு  மணி  நேரம்   பேச   முடிகிறது.  93-வயதிலும்  ஒரு   மணி    நேரத்துக்குப்  பேசக்   கூடிய    வேறு    யாரேனும்   இருக்கிறார்களா   என்பதைத்    தெரிந்துகொள்ள   விரும்புகிறேன்”,  என்றாரவர்.  வரும்  ஜூலையில்   மகாதிருக்கு   93  வயதாகும்.

செய்தியாளர்களிடம்   பேசியபோது   மகாதிருக்கு    அவ்வப்போது   இருமல்  வந்தது.

அவரது   உடல்நிலை   குறித்து    வினவியதற்கு,   வியப்பளிக்கும்   வகையில்   மேடை  ஏறியதும்      இருமல்    நின்று   விடுகிறது  என்றார்.