ரயிஸ், டைம், ரபிடா அம்னோவிலிருந்து நீக்கப்பட்டனர்

 

அம்னோவின் மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான ரயிஸ் யாத்திம், டைம் ஸைநுடின் மற்றும் ரபிடா அசிஸ் ஆகியோர் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அம்னோ உறுப்பியத்திலிருந்து அவர்களை நீக்கும் உத்தரவுக்கான கடிதத்தை நேற்று வெளியிட்டதை அம்னோவின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் உறுதிப்படுத்தினார்.

14 ஆவது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக பரப்புரை செய்வதில் ஈடுபட்டிருப்பதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெங்கு அட்னான் அவர்களுக்கு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இம்மூவரும் பகிரங்கமாக பராமரிப்பு பிரதமர் நஜிப்பையும் அவரது அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்து வந்ததுடன் பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிருக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர்.