மகாதிர்: வெற்றியில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்

லங்காவி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மகாதிர் முகமட் அவரது கருப்பு நிற பிஎம்டபுள்யு காரில் அவரது துணிவியாருடன் வாக்களிப்பு நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்.

100 க்கு மேற்பட்டோர் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களில் சிலர் “துன் நீடூழி வாழ்க” என்று குரலெழுப்பினர். அவர்களில் ஒருவர் நாங்கள் இங்கு வருவதற்கு பணம் கொடுக்கப்படவில்லை என்றார்.

வாக்களித்த பின்னர், அவர் தமது விரலிலிருந்த அழிக்க முடியாத மையின் கரையைக் காட்டினார்.

அவரது ஆதரவாளர்களுக்கு ஊக்கமூட்ட ஏதாவது கூறும்படி கேட்ட போது, “நீங்கள் உங்களின் எதிர்காலத்திற்கு வாக்களிக்கிறீர்கள். நல்லவர்களான இவர்கள் நல்ல அரசாங்கத்தை உறுதி செய்வார்கள்”, என்று அவர் கூறினார்.

ஒரு நல்ல அரசாங்கம் நஜிப்பின் அரசாங்கத்தைப் போலதல்ல என்று மகாதிர் அவரது காரில் இருந்தவாறு கூறினார்.

“அது பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம். நான் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன், நஜிப் ஏமாற்றினாலொழிய”, என்று அவர் மேலும் கூறினார்.