பிரதமர் மகாதிர் செயல்பட தொடங்கி விட்டார்

 

பிரதமராக செயல்பட தொடங்கி விட்ட மகாதிர் அவரது அமைச்சரவையை அமைப்பதில் கவனம் செலுத்துகிறார். இன்று பின்னேரத்தில் அவர் அமைச்சர்களின் பெயரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறையிலிருக்கும் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்படுவார் என்று பேரரசர் தெரிவித்ததாக் மகாதிர் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம், மலேசியா ஊழல் எதிர்ப்பு ஆணையம் மற்றும் சட்டத்துறை தலைவரின்  செயல்பாடுகள் ஆகியவற்றின் மீது மகாதிர் கவனம் செலுத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாபா தேர்தலில் ஊழல் நடந்திருக்கிறது என்பதற்கான ஆதாரம் இருந்தால் அத்தேர்தல் அங்கீகரிக்கப்படாது என்று மகாதிர் கூறியுள்ளார்.