நஜிப்பையும் ரோஸ்மாவையும் இப்போது தடை செய்திருக்கிறோம், இமிகிரேசன் இலாகா கூறுதிறது

 

இப்போது ஒரு புதிய திருப்பம். முன்னாள் பிரதமர் நஜிப்பையும், அவரது துணைவியார் ரோஸ்மாவையும் “இப்போதுதான்” கருப்புப் பட்டியலில் சேர்த்திருக்கிறோம் என்று இமிகிரேசன் இலாகா அறிவிப்பு செய்துள்ளது.

“Immigration Department wishes to confirm that Dato Sri Najib Tun Abdul Razak and Datin Sri Rosmah Mansor have just been blacklisted from leaving the country,” read the Department statement on Facebook.

நஜிப்பும் அவரது குடும்பமும் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.

நானும் எனது குடும்பத்தினரும் வெளிநாடு செல்வதை இமிகிரேசன் இலாகா அனுமதிக்கவில்லை என்று என்னிடம் இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் அந்த உத்தரவை மதிக்கிறேன் மற்றும் நான் எனது குடும்பத்துடன் இந்நாட்டில் இருப்பேன் என்று நஜிப் டிவிட் செய்துள்ளார்.