ஜோகூரில் கட்சித் தாவுதல்: மூன்று அம்னோவினர் பெர்சத்துக்கு தாவினர்

இன்று ஜோகூர் பக்கத்தான் ஹரப்பான் மந்திரி பெசார் பதவி ஏற்கவிருக்கும் வேளையில், மூன்று அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சத்துவுக்குத் தாவியுள்ளனர். இதன் வழி ஆளும் கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பானை கிட்டியுள்ளது.

ராஸ்மான் இத்நாயின் (செடிலி), ரோஸ்லி ஜஹாரி (ஜோகூர் லாமா) மற்றும் அல்வியா தாலிப் (என்டாவ்) ஆகிய மூவருமே அம்னோவிலிருந்து தாவிய தலைவர்கள்.

56 இருக்கைகளைக் கொண்ட ஜோகூர் சட்டமன்றத்தில், தெளிவான பெரும்பான்மைக்கு 29 இருக்கைகளும், மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு 38 இருக்கைகளும் தேவைப்படுகின்றன.

புதன்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஹரப்பான் 36 இருக்கைகளை வென்றது: டிஎபி 14, அமனா 9, பெர்சத்து 8 மற்றும் பிகேஆர் 5.

இன்றையக் கட்சி தாவுதலுடன் ஹரப்பான் 39 இருக்கைகைளைப் பெற்றுள்ளது.