அன்வார் செய்வாய்க்கிழமை விடுவிக்கப்படுவார்

 

சிறையிலிருக்கும் அன்வார் இப்ராகிம் அடுத்த செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்படுவார் என்று அவரது மகள் நுருல் இஸ்ஸா ராய்ட்டரிடம் கூறினார்.

அன்வாருக்கு பேரரசர் முழு மன்னிப்பு அளிப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேகொள்ளப்படும் என்று புதிய பிரதமர் மகாதிர் இவ்வாரம் அறிவித்திருந்தார்.

ஆம், தமது தந்தை அன்வார் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விடுடிக்கப்படுவார் என்று நூருல் கூறினார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில், ஓரினப் புணர்ச்சி சம்பந்தப்பட்ட வழக்கில் அன்வாருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.