மூன்று நாள் இழுபறிக்குப் பின்னர், பெர்சத்துவின் அஹமட் பைசால் பேராக் எம்பி ஆனார்

கடந்த மூன்று நாள்களாக நடந்து வந்த இழுபறிக்குப் பின்னர், பேராக் மாநில பக்கத்தான் ஹரப்பான் மற்றும் பெர்சத்து தலைவர் அஹமட் பைசால் அஸுமூ பேராக் மந்திரி பெசராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

பதவிப் பிரமாண நிகழ்ச்சி இன்று மாலை 6.15 அளவில் கோல கங்சார், இஸ்தானா இஸ்கந்திரியாவில் மாநில ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷாவின் முன் நடந்தது.

புதன்கிழமை நடந்த பொதுத் தேர்தலில் அஹமட் பைசால் மாநில சட்டமன்ற சென்டெரியாங் தொகுதியிலும், தம்புன் நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மாநில அரசை ஹரப்பான் அமைப்பதற்கு ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா எடுத்த முடிவை பேராக் பிஎன் ஏற்றுக்கொள்வதகாக முன்னாள் பேராக் மந்திரி பெசார் ஸாம்ரி அப்துல் காடிர் கூறினார்.