செள பினாங்கின் புதிய முதலமைச்சர்

டிஏபி  தலைமைச்  செயலாளர்   லிம்   குவான்   எங்,  பாடாங்   கோட்டா  சட்டமன்ற   உறுப்பினர்   செள   கொன்   இயோவை  பினாங்கின்   புதிய   முதலமைச்சராக     அறிவித்தார்.

நிதி  அமைச்சராக   நியமிக்கப்பட்டிருக்கும்   லிம்,   தம்முடைய  பராமரிப்பு   முதலமைச்சர்   பணி  இன்றுடன்   முடிவுக்கு   வருவதாகவும்   கூறினார்.

“கனத்த   இதயத்துடன்  பிரிந்து   செல்கிறேன்.  ஆனால்,  பினாங்கு   என்றென்றும்  என்  இதயத்தில்   இருக்கும்.

“என்னைப்  பினாங்கிலிருந்து  அகற்றலாம்,  ஆனால்  பினாங்கை     என்னிடமிருந்து   அகற்ற   முடியாது”,  என  இன்று   கொம்டாரில்     செய்தியாளர்களிடம்  லிம்   கூறினார்.

பினாங்கின்   ஐந்தாவது முதலமைச்சராக  பதவியேற்கும்   செள,   அதற்கு   வாய்ப்பளித்த   லிம்முக்கு   நன்றி   தெரிவித்தார்.