நஜிப்புடன் தொடர்புகொண்ட ஆடம்பர கொண்டோவில் சோதனை நடத்தவில்லை- போலீஸ் மறுப்பு

முன்னாள்   பிரதமர்    நஜிப்    அப்துல்  ரசாக்குடன்    தொடர்புள்ள   ஆடம்பர  அடுக்ககம்  ஒன்றில்      அதிரடிச்   சோதனை   நடத்தப்பட்டதாகக்   கூறப்படுவதை     போலீஸ்   மறுத்தது.

போலீஸ்   அந்த  அடுக்ககம்   சென்று       அங்குள்ள  சிசிடிவி   பதிவைச்    சரிபார்த்தது,  அவ்வளவுதான்  என   கோலாலும்பூர்    போலீஸ்    தலைவர்   மஸ்லான்   லாசிம்    தெரிவித்தார்.

“போலீஸ்  அங்குள்ள  சிசிடிவியைக்  கவனமாக    ஆராய்ந்தது.  அதிரடிச்  சோதனை  எதையும்   நடத்தவில்லை.

“ராய்ட்டரும்   மற்ற    செய்தித்தளங்களும்   கூறியது   பொய்,  உண்மை  இல்லை”,  என்றாரவர்.

நேற்று  ராய்ட்டர்ஸ்,  நஜிப்பின்   உறவினர்களுக்குச்    சொந்தமானது    என்று  கூறப்படும்   அடுக்ககம்   ஒன்றுக்குச்  சென்ற   போலீசார்,    அங்கு   முக்கியமான    ஆவணங்கள்   உள்ளனவா    என்று   சோதனையிட்டதாகக்  கூறியிருந்தது.  அது,   உயர்  போலீஸ்   அதிகாரிகள்    இருவர்   கொடுத்த    தகவல்  என்றும்   ராய்ட்டர்ஸ்   குறிப்பிட்டிருந்தது.