அன்வார் விடுவிக்கப்படுவதில் தாமதம் ஏற்படலாம், மகாதிர் கூறுகிறார்

 

பிகேஆரின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு மன்னிபு அளித்தல் மற்றும் விடுவிக்கப்படுதல் ஆகியவற்றில் சற்று தாமதம் ஏற்படலாம் என்று பிரதமர் மகாதிர் இன்று கூறினார்.

அன்வாருக்கு மன்னிப்பு பெறுவோம் என்ற நமது வாக்களிப்பு தொடரும், ஆனால் அதற்கான வழிமுறை பின்பற்றப்படும்.

அது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள போதிலும், மன்னிப்பு வாரியம் கூடுவதில் சிறு தாமதம் ஏற்படும், ஏனென்றால் நாம் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முன்னதாக, அன்வாரின் மகள், பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா, மன்னிப்பு வாரியம் நாளை கூடும் என்று கூறினார்.