மகாதிர் மலேசியாவைச் சிறந்த எதிர்காலத்திற்கு இட்டுச் செல்வார், சாமிவேலு கூறுகிறார்

 

பிரதமர் மகாதிர் நாட்டை அனைத்து மலேசியர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு இட்டுச் செல்வார் என்று மஇகாவின் முன்னாள் தலைவர் ச. சாமிவேலு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மகாதிர் பிரதமராக இருந்த காலத்தில் சாமிவேலு அவரது அமைச்சரவையில் அமைச்சராக 1981 லிருந்து 2003 ஆம் ஆண்டு வரையில் இருந்துள்ளார். தாம் மகாதிர் மீது எப்போதும் மிக அதிகமான மரியாதை வைத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

மலேசியப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 14 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பக்கத்தான் ஹரப்பானுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சாமிவேலு கூறினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நான் மலேசிய மக்களைப் பாராட்ட விரும்புகிறேன். எப்போதும் போல, நான் எனது மனமார்ந்த மற்றும் வலுவான ஆதரவை மகாதிருக்கும் அவரது ஆற்றல்மிக்க குழுவுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ச.சாமிவேலு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.