ரஷ்ய அதிபரைப் பற்றி எழுதிய நபர் சுட்டுக் கொலை: நெற்றியில் சூட்டு காயத்தோடு உடல் மீட்ப்பு

ரஷ்ய ஊடகவியலாளர் ஆர்காடி தலையில் சுடப்பட்ட நிலையில், சடலமாக தனது வீட்டில் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இவர் கடந்த சில வருடங்களாக ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எதிராக பல கருத்துக்களை முன்வைத்து, கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டு வந்தார். ராணுவ ஆய்வு செய்திகள் பலவற்றை எழுத வல்ல ஆர்காடி, ரஷ்யா பின் நோக்கிச் செல்வதாக கூறி வந்தார்.

இவருக்கு அரச தரப்பில் இருந்து பல மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இவர் எதனையும் பொருட்படுத்தாது, தனது நியாமான கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இன் நிலையில். அவரது வீட்டுக்குள் புகுந்த சில மர்ம நபர்கள். சைலன்சர் போட்ட துப்பாக்கியை பாவித்து. அவர் நெற்றியில் சுட்டு விட்டு சென்றுள்ளார்கள். பிணமாக கிடந்த அவரை பொலிசார் மீட்டுள்ளார்கள். இது ரஷ்ய அதிபர் புட்டினின் நேரடி உத்தரவில் இடம்பெற்ற மற்றுமொரு கொலை என ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளது.

-athirvu.in