அம்னோ அதன் தொகுதிகளுக்கு நிதி அளிப்பதை நிறுத்தியது

14வது  பொதுத்    தேர்தல்   தோல்வியை   அடுத்து   அம்னோ   நாடு   முழுவதுமுள்ள   அதன்   தொகுதிகளுக்கு   நிதி   அளிப்பதை    நிறுத்திக்  கொண்டுள்ளது.

நிதி  அளிப்பு   நிறுத்தப்படுவதைத்    தெரிவித்து   கட்சித்    தலைமைச்   செயலாளர்   தெங்கு    அட்னான்   தெங்கு   மன்சூர்  தொகுதித்   தலைவர்களுக்கு    எழுதிய   கடிதமொன்று   மலேசியாகினி   பார்க்கக்  கிடைத்தது.

“கட்சியின்   நிதிநிலையை   ஆராய்ந்த தலைமையகம்   2018  மே   மாதத்திலிருந்து    தொகுதிகளுக்கும்  பிரிவுகளுக்கும்   அளித்துவந்த   நிதியை  நிறுத்திக்கொள்ளும்   என்பது   இதன்வழி    தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

“என்றாலும்,  தொகுதிகளும்  பிரிவுகளும்   தொடர்ந்து   எப்போதும்போல்    செயல்பட்டு   வரும்  என  எதிர்பார்க்கப்படுகிறது”,  என்று   அக்கடிதம்   கூறியது.

அம்னோ  தலைமையகக்  கடிதம்      கிடைக்கப்பெற்றதை  ஜோகூர்   அம்னோ   இளைஞர்   தலைவர்   ஒருவர்   உறுதிப்படுத்தினார்.