அம்னோ தேர்தலில் அணி அமைப்பதாகக் கூறப்படுவதற்கு மாட் ஹசனும் ஜொகாரியும் மறுப்பு

எதிர்வரும்    அம்னோ    தேர்தலில்  முறையே   துணைத்   தலைவர்  பதவிக்கும்  உதவித்  தலைவர்   பதவிக்கும்     போட்டியிடுவதற்கான  பாரங்களைச்   சமர்ப்பிக்க,    நெகிரி   செம்[பிலான்  அம்னோ   தலைவர்   முகம்மட்  ஹசனும்,  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்   ஜொகாரி   அப்துல்  கனியும்     இன்று  கட்சித்   தலைமையகம்    வந்தனர்.

அவர்களை    அணுகி     ஜூன்   30  தேர்தலுக்கு  அணி  அமைக்கிறார்களா  என்று   வினவியதற்கு   இருவரும்   மறுத்தனர்.

அவர்களுடன்  நடப்பு   உச்சமன்ற   உறுப்பினர்கள்    ஷம்சுல்   அனுவார்  நஸாராவும்    ஹம்சா   சைனுடினும்   காணப்பட்டனர்.

கூட்டரசு   அம்னோ  இளைஞர்   தலைவர்   ரஸ்லான்   ரபி,  உச்சமன்றத்துக்குப்  போட்டியிடும்     பாரத்துடன்  வந்திருந்தார்.

அந்த  ஐவரும்   அலுவலகம்  சென்று   பாரங்களை  ஒப்படைப்பதற்கு  முன்னர்   கோலாலும்பூர்   மினாரா   டத்தோ   ஒன்   வளாகத்தில்   ஒன்றாகக்  கூடி  நின்றதைக்   காண    முடிந்தது.