ஜூலை 16-இல் நாடாளுமன்றக் கூட்டம், அதில் ஜிஎஸ்டி, ஏஎப்என் இரத்துச் செய்யப்படும்

இவ்வாண்டுக்கான   முதலாவது    நாடாளுமன்றக்  கூட்டம்  ஜூலை  16-இல்   தொடங்குகிறது. மக்களவைக்  கூட்டம்  20  நாள்களுக்கு   நடக்குமென்று  பிரதமர்  டாக்டர்    மகாதிர்  முகம்மட்    கூறினார்.

இக்கூட்டத்தில்  ஜிஎஸ்டியையும்   2018  பொய்ச் செய்தித் தடைச்  சட்டத்தையும்  இரத்துச்  செய்யும்   சட்டவரைவுகள்    கொண்டுவரப்படும்.

“மற்ற   சட்டங்களில்   திருத்தங்களும்    செய்யப்படும்”,  என்று   மகாதிர்   வாராந்திர   அமைச்சரவைக்  கூட்டத்துக்குப்  பின்னர்    செய்தியாளர்களிடம்   தெரிவித்தார்.