இந்தோனேசிய மாதுவை மலைப்பாம்பு விழுங்கியது

 

54 வயதான வா தீபா என்ற ஓர் இந்தோனேசிய மாதுவை தென்கிழக்கு சுலாவெசியில் ஓர் எட்டு மீட்டர் மலைப்பாம்பு விழுங்கி விட்டது.

ரமதானின் கடைசி நாளன்று தமது தோட்டத்திலுள்ள சோளங்களைப் பார்ப்பதற்காகச் சென்ற வா தீபா காணாமல் போய் விட்டார்.

அடுத்த நாள் காலையில் அவரது உறவினர்கள் தேடிய போது அவரது கால் தடங்களையும், டார்ச் லைட்டையும், காலணிகளையும், ஒரு கத்தியையும் கண்டனர் என்று ஜாக்கர்த்தா போஸ்ட் கூறுகிறது..

அதன் பின்னர். உள்ளூர்வாசிகள் குடல் வீங்கிப் போயிருந்த ஒரு மலைப்பாம்பைக் கொன்று, அதன் வயிற்றை கிழித்து பார்த்த போது அம்மாதுவின் உடலை பாம்பின் வயிற்றுக்குள் கண்டனர்.

இது போன்ற சம்பவம் கடந்த ஆண்டும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.