அன்வார் 10 நாள் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்

மலாயாப்  பல்கலைக்கழக  மருத்துவ  மையத்தில்   10   நாள்  சிகிச்சை  பெற்று  வந்த  பிகேஆர்   ஆலோசகர்   அன்வார்  இப்ராகிம்  இன்று   சிகிச்சை   முடிந்து  வெளியேறினார்.

நேற்றிரவு   அவர்,  முகநூல்  பதிவு   ஒன்றில்   மருத்துவ  அதிகாரிகளுக்கும்   நலம்  விரும்பிகளுக்கும்   நன்றி   தெரிவித்துக்  கொண்டார்.

அன்வார்      தோள்வலிக்காக   ஜூன்  23-இல்   மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார்.

இந்தத்  தோள்வலி   நீண்ட  காலமாகவே   அவருக்கு  இருந்து  வருகிறது. கடந்த   ஆண்டு   செப்டம்பரில்   அவர்   சிறைக்கைதியாக   இருந்தபோது  ஏற்பட்ட  விபத்தின் விளைவாக    அவ்வலி    மேலும்  மோசமடைந்தது.

மார்ச்  மாதம்  தோளில்   அவருக்கு   அறுவை   சிகிச்சை    செய்யப்பட்டது.