ஐஜிபி: ஜோ லோ மக்காவில் உள்ளார்

1எம்டிபி  விவகாரம்  தொடர்பில்   தேடப்பட்டு   வரும்   வணிகரான   ஜோ  லோ  மக்காவில்  பதுங்கி  இருப்பதாக  இன்ஸ்பெக்டர்  அப்  போலீஸ்   முகம்மட்  பூஸி  ஹருன்   தெரிவித்தார்.

போலீஸ்   அவரை  ஹாங் காங்கில்  தேடியது.  போலீஸ்  பிடிப்பதற்குள்   அவர்  மக்காவு சென்று  விட்டார்   என்றாரவர்.

“இப்போது  அவர்  மக்காவில்  இருப்பதாக     தெரியவந்துள்ளது.  போலீஸ்  குழுவை  ஹாங் காங்   அனுப்பி  வைத்தோம்.  நாங்கள்   அங்கு   சென்றடைந்தபோது   அவர்  மக்காவுக்குச்   சென்று  விட்டார்”,  என  பூஸி  இன்று  புத்ரா  ஜெயாவில்    தெரிவித்தார்.