இந்தியாவிலுள்ள ஈழ அகதி பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள்; அமெரிக்கா அறிவிப்பு

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதி பெண்கள் மத்தியில் பாலியல் பலாத்கார தொந்தரவுகள் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த தகவலை அமெரிக்காவின் 2018-ஆம் ஆண்டுக்கான ஆட்கடத்தல் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

அத்துடன் இலங்கையில் உள்ள பெண்களும் பாலியல் வர்த்தக நோக்கத்துக்காக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

மேலும் இலங்கைப்பெண்களுடன் பாகிஸ்தான், ஈரான், பிலிப்பைன்ஸ் பெண்களும் இந்த வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படுவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் அதிக சம்பளம் என்ற போர்வையில் இந்த வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதாகவும் இதன்மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் மற்றும் ரோஹிங்கியா அகதி பெண்கள் மத்தியில் பாலியல் பலாத்கார தொந்தரவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-athirvu.in

TAGS: