சுங்கை காண்டிஸ் இடைத்தேர்தலில் ஹரப்பான் பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்தும்

 

சுங்கை காண்டிஸ் இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்துவார் என்பதை சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி இன்று உறுதிப்படுத்தினார்.

இம்முடிவு ஹரப்பான் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அமிருடின் கூறினார்.

பிகேஆர் சின்னம் சுங்கை காண்டிஸில் நன்கு நிலைநாட்டப்பட்டுள்ளது. அந்த இருக்கைகையை தொடர்ந்து மூன்று முறை நாம் வென்றுள்ளோம் என்று பத்துமலையில் இன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமிருடின் செய்தியாளர்களிடம் கூறினார்.

இருப்பினும், இந்த இடைத்தேர்கலுக்கான பிகேஆர் வேட்பாளர் இன்னும் பெயர் குறிப்பிடப்படவில்லை.

சுங்கை காண்டிஸ் சட்டமன்ற உறுப்பினர் மாட் சுஹாமி ஷாபியி ஜூலை 2 இல் காலமானதைத் தொடர்ந்து அந்த இருக்கை காலியானது.

தேர்தல் ஆணையம் அத்தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு ஆகஸ்ட் 4- லும், வேட்பாளர் நியமனம் ஜூலை 21-லும் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.