சற்று முன் : இஸ்ரேல் 100 ராக்கெட்டுகளை ஏவி பெரும் தாக்குதல் நடத்தியுள்ளது

இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் பகுதிமேல் சுமார் 100 ஏவுகணைகளை ஏவி பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. ஹமாஸ் இயக்கத்தின் நிலைகள் மீது தாம் தாக்குதல் நடத்துவதாக கூறி, இஸ்ரேல் நடத்தியுள்ள இந்த தாக்குதல் மிக மிக கோரமானது எனவும். இது மக்கள் நிலைகள் மீதே விழுந்து வெடித்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

சற்று முன்னர் இடம்பெற்ற இந்த தாக்குதலில் 100 குறுந்தூர ஏவுகணைகளை, இஸ்ரேல் ஏவியுள்ளது. சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ள இந்த சமயம் பார்த்து இஸ்ரேல் இவ்வாறு நடந்துகொள்வது தொடர்பாக பல உலக நாடுகள் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

-athirvu.in