இஸ்ரேல் – பாலத்தீன எல்லையில் சண்டை: 5 பேர் பலி

இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் மற்றும் நான்கு பாலத்தீனர்கள் வெள்ளிக்கிழமையன்று கொல்லப்பட்ட பெரிய சண்டைக்குப் பின்னர், காசா எல்லையில் ஓரளவு அமைதி நிலவுகிறது.

ஐக்கிய நாடுகள் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தம் மூலம் இஸ்ரேலுக்கும், ஹமாஸூக்கும் இடையில் பின்னிரவில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

எல்லையில் ஊடுருவ பாலத்தீன தீவிரவாதிகளால் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறிய இஸ்ரேல் ராணுவம், அதற்கு பதிலடியாக ஹமாஸ் நிலை ஒன்றில் டாங்கி தாக்குதல் நடத்தியது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயலாக அமைந்தது.

எல்லையில் இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, காசாவிலுள்ள பல டஜன்கணக்கான இலக்குகளை இஸ்ரேலிய படைப்பிரிவுகள் தாக்கின.

2014ம் ஆண்டு நடைபெற்ற கடைசி போருக்கு பிறகு, காசாவிலும், அதனை சுற்றியுள்ள இடங்களிலும் முதல் முறையாக ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil