அடுத்தத் திங்கள்கிழமை ஜிஎஸ்டியை அகற்ற அரசாங்கம் திட்டமிடுகிறது

ஜிஎஸ்டியை அகற்றுவதற்கான முன்மொழிதலை அடுத்தத் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் லியு வுய் கியோங் இன்று கூறினார்.

ஜிஎஸ்டிக்கு மாற்றாக செயல்படுத்தப்படவிருக்கும் விற்பனை மற்றும் சேவைகள் வரி (எஸ்எஸ்டி) மசோதாவும் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்.

பேரரசரின் உரை மீதான விவாதம் முடிவுற்ற பின்னர், ஜிஎஸ்டியை அகற்றுவதற்கான முன்மொழிதல், அதன் பின்னர் எஸ்எஸ்டி மசோதா தாக்கல், அதனைத் தொடர்ந்து போலியானச் செய்திச் சட்டம் அகற்றல் ஆகியவை இடம் பெறும் என்று அமைச்சர் இன்று நாடாளுமன்ற முகப்பு அறையில் கூறினார்.