யாழில் சற்று முன்னர் பல இடங்களிலும் வாள்வெட்டு ..

யாழில் பல இடங்களிலும் சற்று முன்னர் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஆணைக்கோட்டை, பொன்னையா வீதி மற்றும் புது வீதி, கொக்குவில் பிரம்படி வீதி ஆகிய இடங்களில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகத்தை மூடியவாறு நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டு பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

-athirvu.in

TAGS: