விடுதலைப் புலிகளின் காலத்தில் இது இருக்கவில்லை: மீண்டும் அதிரடி

விடுதலை புலிகளின் காலத்தில் போதைப்பொருட்களிகளின் பாவனை இருக்காத போதிலும் தற்போது அதன் பாவனை அதிகரித்துள்ளதாக சீனித்தம்பி யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளின் காலத்தில் போதைப்பொருளின் பாவனை இருக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள சீனித் தம்பி யோகேஸ்வரன், போதைப்பொருட்கள் அதிளவு புழகத்தில் இருப்பது திட்டமிட்ட ஒரு செயற்பாடு என கூறியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு போதைப்பொருள் பாவனை மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றங்கள் தீவிரமாகிய நிலையில், விடுதலை புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியிருந்தார்.

இந்த கருத்து தென்னிலங்கையில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், விஜயகலா மகேஸ்வரன் இராஜாங்க அமைச்சு பதவியையும் இராஜினாமா செய்ய நேரிட்டமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

-athirvu.in

TAGS: