கோட்டை இராணுவத்துக்கே சொந்தம் – என்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதி

கோட்டைகள் இராணுவத்துக்கே உரித்தானவை என்றும், யாழ்ப்பாணக் கோட்டையை விட்டு சிறிலங்கா இராணுவம் வெளியேறாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க.

சிறிலங்கா இராணுவத் தளபதி நேற்றுக்காலை யாழ்ப்பாணம் கோட்டைக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் கருத்து வெளியிடுகையில்,

“யாழ்ப்பாணக் கோட்டையை இராணுவம் முழுமையாக கைப்பற்றப் போகிறது என்று கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.

யாழ். கோட்டையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் அங்கே இருக்கிறார்கள்.

கோட்டைக்குள் இராணுவம் இருப்பது தான் வழக்கம். ஆனால், பொதுமக்கள் எந்த நேரத்திலும் கோட்டைக்குள் வரலாம். அதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: