சிங்களக் குடியேற்றங்களை அனுமதிக்க மாட்டோம்: இரா.சம்பந்தன்

மஹாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பேரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இருந்து, வேறு மக்களை கொண்டு வந்து குடியேற்றுவதை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

‘அதனை நாங்கள் தொடர்ச்சியாக எதிர்ப்போம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

திருகோணமலை – திரியாய் அருள்மிகு வரத விக்னேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அங்கு ஊடகங்களிடம் பேசும் போதே இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மஹாவலி அபிவிருத்தி திட்டத்தின் பேரில் சிங்கள குடியேற்றம் இடம்பெறுவதை தடுத்து நிறுத்த கோரி அண்மையில் முல்லைத்தீவில் பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை, குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: