மாவீரர்கள் சாட்சியாக நடந்த திருமணம்! நெகிழ்ந்துபோன ஈழத் தமிழ் மக்கள்!!

புலம் பெயர் நாடுகளில் எமது உறவுகள் வாழ்ந்தாலும் இன்றும் எமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் மறக்கவில்லை என்பதற்கு முன்னுதாரணமாக சுவிஸ்சர்லாந்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

தமிழ் மொழிக்காகவும் மறைந்த மாவீரர்களை நினைவு கூரும் வகையிலும் ஒரு திருமணம் நடந்துள்ளது. சுவிஸ் வாழ் தமிழ் இளைஞன் சுவஸ்சர்லாந்து ஞானலிங்கேஸ்வரர் கோவிலில் தொடர்பு கொண்டு தமிழ் முறைப்படி திருமணம் செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவரது இவ் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஆலய நிர்வாகமும் அதற்கேற்ற முன் ஆயத்தங்களையும் மேற் கொண்டுள்ளது. அதற்கமைய குறித்த இளைஞனின் திருமணம் மறைந்த மாவீரர்களை சாட்சியாக வைத்து தமிழ் முறைப்படி நடந்துள்ளது.

இவ்வாறான செயற்பாட்டைக் காணும்போது புலம்பெயர் வாழ் எமது உறவுகள் பலர் தமிழின் மீதும் மறைந்த மாவீரர்கள் மீதும் வைத்துள்ள மரியாதை தெள்ளத்தெளிவா வெளிபடுகிறது.

-eelamnews.co.uk

TAGS: