யுத்தத்தில் அங்கம் இழந்த நிலையிலும் சாதித்து காட்டிய ஈழத்து மாணவி..

இலங்கையில் தரம் 5 புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் இணையத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், குறித்த பரீட்சையில் மாவட்டத்தில் முன்னிலை பெற்ற, சித்தியடைந்த மாணவிகளுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் யுத்த பூமியில் இருந்து அங்கம் இழந்தாலும் மனவுறுதி தளராமல் தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்துள்ளார்.

முல்லைத்தீவு, முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவியான ராகினி என்ற மாணவி 169 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.

தற்போது ராகினிக்கு சமூக வலைத்தளங்களில் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: