ஸாகிட் இன்றும் எம்எசிசியால் விசாரிக்கப்படுகிறார்

முன்னாள் துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று எம்எசிசி தலைமையகத்தில் அவரது வாக்குமூலத்தைத் தொடர்ந்து பதிவு செய்ய வந்துள்ளார்.

அவர் காலை மணி 9.15-க்கு வந்தார். அவரது மகள் சுமார் 10 நிமிடங்களுக்குப் பின்னர் அங்கு வந்து சேர்ந்தார்.

இன்றைய விசாரணை நேற்று நடந்த விசாரணையின் தொடர்ச்சி என்று தெரிகிறது. நேற்று ஸாகிட் கிட்டத்தட்ட 9 மணி நேரத்தை அங்கு கழித்தார்.

இன்று அவர் எது குறித்து விசாரிக்கப்படுகிறார் என்பது தெரியவில்லை, ஏனென்றால் அவர் ஏன் மீண்டும் அழைக்கப்பட்டார் என்பதற்கான காரணம் எதையும் எம்எசிசி கூறவில்லை.

நேற்று ஹமிடியும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் கிளம்பி விட்டார்.