ஆசியான் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ள வேளையில் பாலியில் நிலநடுக்கம்

பாலி ஆசியான் தலைவர்கள் கூட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் சுற்றுலாவுக்குப் பேர்பெற்ற அத்தீவை ரிக்டர் கருவியில் 6.0 என்று பதிவான நில நடுக்கம் தாக்கியதில் மூவர் கொல்லப்பட்டனர், பல கட்டிடங்கள் சேதமடைந்தன.

ஆசியான் தலைவர்கள் கூட்டம் மட்டுமல்லாமல் அனைத்துலக பண நிறுவனம் மற்றும் உலக வங்கியின் ஆண்டுக் கூட்டமும் அங்கு நடைபெறவுள்ளது. அதற்கு 12,000-இலிருந்து 15,000 பேர்வரை வருவார்கள்.

ஆசியான் தலைவர்கள் கூட்டத்தில்   கலந்துகொள்ள  பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மலேசியக் குழுவுக்குத் தலைமையேற்று அங்கு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

-பெர்னாமா