நாடாளுமன்றத்தில் மீண்டும் அன்வார், மகாதிர் மகிழ்ச்சி

 

நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்யப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம்மை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தார் பிரதமர் மகாதிர்.

நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒரே கட்சியைச் சேர்ந்தவர். அன்வாரின் பெரும் வெற்றி எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு எதிராக, பாஸ் கட்சியையும் சேர்த்து, அறுவர் போட்டியிட்டனர். ஏழாம் எண் வெற்றி பெற்றது என்றாரவர்.

மகாதிர் இன்று மதியம் கெடாவுக்குப் புறப்பட்டார். ஏன் கெடாவுக்கு என்று கேட்டதற்கு, கெடா சுல்தானுடன் ஓர் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போவதாக அவர் கூறினார்.

கெடா சுல்தானுக்கு ஒரு பதக்கத்தைக் கொடுக்கப் போவதாக அவர் கூறினார்.

“வேறு பிரச்சனைகள் இல்லை. அனைத்தும் நன்று”, என்றார் மகாதிர்.