ஜாஹிட்டுக்கு நாளை மீண்டும் எம்ஏசிசி விசாரணை

மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) Yayasan Akal Budi நிதி முறைகேடுகள் மீதான விசாரணைக்கு ஆறாவது தடவையாக அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடியை அழைத்துள்ளது.

எம்ஏசிசிக்கு அணுக்கமான வட்டாரமொன்ன்று பணச் சலவை மற்றும் பயங்கரவாத நிதியுதவித் தடுப்புச் சட்டத்தின்கீழும் அதிகாரமீறல் சட்டத்தின்கீழும் ஹமிடி விசாரிக்கப்படுவார் என்று கூறியது.

இதனிடையே, அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லொக்மான் நூர் நாளை பிற்பகல் மணி 3க்குள் எம்ஏசிசி தலைமையகம் வந்து சரணடையுமாறு ஹமிடிக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் வெள்ளிக்கிழமை அவர் குற்றஞ்சாட்டப்படலாம் என்றும் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.