யாழில் வாள்களுடன் வந்த கும்பலை தெறித்தோட வைத்த பொதுமக்கள்!

யாழ் தென்மராட்சி மிருசுவில் வடக்கு குருக்கள்மாவடி பகுதியில் சற்று முன்னர் (8.40pm) வாள் வெட்டு குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

இதன் போது பிரதேச மக்கள் சுற்றிவளைத்த போது வாள் கத்தி மற்றும் மோட்டார் வாகனத்தை கைவிட்டு தப்பியோட்டியுள்ளனர்.

இந்நிலையில் வாள் வெட்டு குழுவால் விட்டு சென்ற ஆயுதங்கள் கொடிகாம பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

அண்மைக்காலமாக தென்மராட்சியில் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்று வருகின்றமையால் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: