நெகிரியில் நஜிப், ரோஸ்மாவின் டத்தோஸ்ரீ விருதுகள் பறிமுதல்

நெகிரி செம்பிலான் அரண்மனை முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் அவரின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கும் கொடுத்திருந்த டத்தோஸ்ரீ விருதுகளை பறிமுதல் செய்துள்ளது.

நஜிப்புக்குக் கொடுக்கப்பட்ட டார்ஜா ஸ்ரீ உத்தமா நெகிரி செம்பிலான் விருதும் ரோஸ்மாவுக்குக் கொடுக்கப்பட்டிருந்த டார்ஜா ஸ்ரீ பாடுகா துவாங்கு ஜா’பார் யாங் அமாட் தெர்பூஜி விருதும் பறிமுதல் செய்யப்படுகிறது என்று விருதுகள் பதிவாளரை மேற்கோள்காட்டி பெர்னாமா அறிவித்தது.