ஸ்பான் புதிய தலைவர் சார்லஸ் சந்தியாகு

கிள்ளான் எம்பி சார்லஸ் சந்தியாகு தேசிய நீர் சேவை ஆணைய(ஸ்பான்)த்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை அறிவித்த நீர், நில, இயற்கை வள அமைச்சர் சேவியர் ஜெயகுமார், 2020 அக்டோபர் 31வரை ஈராண்டுக் காலத்துக்கு அவர் அப்பதவி வகிப்பார் என்றார்.

“முன்பிருந்த தலைவர் 14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பதவி விலகினார்.

“எனவே, எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மாண்புமிகு சார்ல்ஸ் அந்தோனி சந்தியாகுவைப் புதிய ஸ்பான் தலைவராக நியமனம் செய்கிறேன்”, என்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் அமைச்சர் அறிவித்தார்.

அந்நியமனத்தை ஏற்றுக்கொண்ட சார்ல்ஸ் அத்துறையில் தமக்கு ஏற்கனவே அனுபவம் உண்டு என்றார். 2008-இல் எம்பி ஆவதற்கு முன்பே நீர்ச் சேவைத் தொழில் சட்டம் 2006-ஐ வரைந்ததில் தமக்கும் பங்குண்டு என்றார்.