தகவல் பெறுவதற்காக நஜிப்பின் கதவைத் தட்டியது எம்ஏசிசி

இன்று காலை எம்ஏசிசி அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று கோலாலும்பூர், லங்காக் டூடாவில் உள்ள முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் இல்லம் சென்றது.

அதிகாரிகள் அங்கு சென்றது திடீர்ச் சோதனைக்காக அல்ல என்று எம்ஏசிசி துணைத் தலைவர் (நடவடிக்கைகள்) அஸாம் பாக்கி கூறினார்.

ஆணையத்தின் விசாரணைக்குத் தேவையான தகவல்களைப் பெறத்தான் அதிகாரிகள் சென்றனர் என்று மலேசியாகினியிடம் தெரிவித்த அவர் மேல்விவரங்களை வெளியிட மறுத்தார்.

“சோதனையிடுவதற்கு அவர்கள் செல்லவில்லை. எங்கள் விசாரணைக்கு உதவும் தகவல்களைப் பெறத்தான் சென்றார்கள்”, என்றவர் குறுஞ் செய்தி அனுப்பி இருந்தார்.