இந்து அரசுப் பணியாளர்களுக்கு தீபாவளிக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை

அரசாங்கத்தில் பணிபுரியும் இந்துக்களுக்கு இவ்வாண்டு தொடங்கி தீபாவளிக்கான ஒரு நாள் பொது விடுமுறையுடன் ஒரு நாள் கூடுதல் விடுப்பும் வழங்கப்படுகிறது. இது பதிவு செய்யப்படாத விடுப்பாகும்.

இந்த நற்செய்தி பொதுச் சேவை தலைமைச் செயலாளர் பொர்ஹான் டோலா விடுத்துள்ள அதிகாரத்துவ சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

பதிவு செய்யப்படாத அந்த விடுப்பை நவம்பர் 7-இல் அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

“தீபாவளியை முன்னிட்டு இந்து அரசாங்கப் பணியாளர்கள் அவர்கள் குடும்பத்தோடு கூடுதல் நேரம் செலவிடுவதற்கு வசதியாக இந்தப் பதிவு செய்யப்படாத விடுப்பு வழங்கப்படுகிறது”, என பொர்ஹான் கூறினார்.