சாபாவில் மூன்று பிகேஆர் தொகுதிகளில் மறுதேர்தல்

சாபாவில் நவம்பர் 3ஆம் 4ஆம் தேதிகளில் ஒத்திவைக்கப்பட்ட மூன்று பிகேஆர் தொகுதி தேர்தல்கள் இன்றும் நாளையும் நடைபெறும்.

கெனிங்காவில் மறுதேர்தல் இன்று நடைபெறும் வேளையில் தாவாவ், பென்சியாங்கான் ஆகிய இரு தொகுதிகளிலும் நாளை நடைபெறுகிறது.

கெனிங்காவ் தொகுதிக்கு பெர்னாமா சென்று பார்த்தபோது அங்கு வாக்களிப்பு சுமூகமாக நடந்து கொண்டிருந்தது. வாக்களிப்பு மையமான கெனிங்காவ் விளையாட்டு வளாகத்தின் பூப்பந்து மண்டபத்தில் காலை ஏழு மணிக்கே கட்சி உறுப்பினர்கள் திரண்டிருந்தனர்.

9 மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது. பிற்பகல் மணி 4க்கு அது முடிவுக்கு வரும்.

அத்தொகுதியில் 6,000 உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.