அமைச்சர்: எச்ஆர்டிஎப் பணம் ஒரு சிலரின் நன்மைக்காக திருப்பி விடப்பட்டது

மனிதவள மேம்பாட்டு நிதி(எச்ஆர்டிஎப்)யின் பெரும்பகுதி ஒரு சில தனிப்பட்டவர்களின் நன்மைக்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது என மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார்.

ஒரு சிலர் சொத்துகள் வாங்கவும் அந்த ஒரு சிலருக்குச் சம்பளம், போனஸ் கொடுப்பதற்கும் அதிலிருந்த பணம் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது என குலசேகரன் தெரிவித்ததாக மலேசியன் இன்சைட் கூறியது.

“அவர்களில் ஒரு சிலருக்கு எதிராக சிவில், கிரிமினல் சட்ட நடவடிக்கைகள் எடுப்போம்”, என்றவர் கூறினார்.