நம்பி வந்த மைத்திரியை நடுத்தெருவில் விட்டுச்சென்ற மஹிந்த!

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் அவசரமாக கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை விசேட கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வார காலமாக கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை முடிவில்லாது தொடர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றை கலைத்த ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனையடுத்து தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சிகள் தயார்ப்படுத்தலில் இறங்கியுள்ள. இந்நிலையில், சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்து பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வெளியேறி பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் நாளை அவசரமாக கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: