பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்தும் வழிமுறை அடுத்த மாதம் அறிவிக்கப்படும்

தேசிய உயர்க் கல்விக் கடன் (பிடிபிடிஎன்) நிதியில் கடன் பெற்றவர்கள் அதைத் திருப்பிச் செலுத்தும் முறைகள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என பிடிபிடிஎன் தலைவர் வான் சைபுல் வான் ஜான் கூறினார்.

2019 பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர் லிம் குவான் எங் பிடிபிடிஎன்-னுக்குச் செய்யப்படும் ஒதுக்கீடு பற்றியும் பிடிபிடிஎன்னின் புதிய கடன் கொள்கை பற்றியும் அறிவித்ததை அடுத்து கடனைத் திருப்பிச் செலுத்தும் வழிமுறைகளை வரையும் முன்னர் மேல்விவரங்களுக்காகக் காத்திருப்பதாக அவர் சொன்னார்.

அந்த அறிவிப்பைக் கேட்டதும் கடனை எப்படித் திருப்பிச் செலுத்தலாம் என்பதை அவர்கள் தெரிந்து கொள்வார்கள் என்றாரவர். குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு உதவி அளிக்கப்படும். பெரிய தொகையைத் திருப்பிச் செலுத்தும் சுமை அவர்களுக்கு இருக்காது. அதே வேளை கடன் வாங்கியவர் கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதும் முக்கியம் என்றார்.