லண்டன் வீதிகள் எங்கும் புலிக்கொடி: தமிழர்களின் ஆதிக்கத்தை கட்டி நிமிர்ந்து பறக்கிறது !

லண்டனில் உள்ள பல முக்கியமான வீதிகள் எங்கும், தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது. லண்டனில் பல முக்கிய இடங்களில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். பல ஆயிரக்கணக்கான வியாபர நிலையங்கள் தமிழர்களுக்கு சொந்தமானவை. அங்கே பல இடங்களில் புலிக் கொடி மிடுக்குடன் பறக்கிறது. இதனைப் பார்க்கும் பல வேற்றின மக்கள் , இது எந்த நாட்டுக் கொடி ? என்ன நடக்கிறது ? என்று கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளார்கள்.

இது இவ்வாறு இருக்க லண்டனில் வசிக்கும் சிங்களவர்களுக்கும் , இலங்கை அரசுக்கும் லண்டன் தமிழர்கள் அழுத்தம் திருத்தமாக ஒரு செய்தியை சொல்லி உள்ளார்கள். நாம் என்றும் விடுதலைப் புலிகள் பக்கமே இருக்கிறோம். எமது தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் தான். அவர் காட்டிய வழியில் நாம் செல்வோம்… மாவீரர்களை உன்னதமாக மதித்து நாம் நினைவு கூருவோம் என்பதே ஆகும் . இதனை மறைக்கவோ இல்லை மறுக்கவோ முடியாது.

கொடிகளை லண்டனில் உள்ள TCC அமைப்பினர் தாராளமாக வழங்கி வருகிறார்கள். நீங்களும் உங்கள் வியாபார ஸ்தலத்தில் தேசிய கொடியைக் கட்ட விரும்பினால், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை(TCC) தொடர்பு கொள்ளுங்கள்.

-athirvu.in

TAGS: