மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை – அரசாங்க தகவல் திணைக்களம்!

மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இன்று(சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மாவீரர் நினைவு தின கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை.

அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என உணரும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதையும் அரசு வலியுறுத்துகின்றது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-eelamnews.co.uk

TAGS: