அன்வார் : வேதமூர்த்தியின் அமைச்சர் பதவி, பிரதமரைப் பொறுத்தது

பி வேதமூர்த்தியின் அமைச்சர் பதவி, பிரதமர் டாக்டர் மகாதிரைப் பொறுத்தது என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

வேதமூர்த்தியைப் பதவி விலகச் சொல்லும் இப்ராஹிம் அலியின் வலியுறுத்தல் தொடர்பில் அன்வார் இவ்வாறு கருத்துரைத்தார்.

“கோவில் பிரச்சனையை நாம் முதலில் தீர்க்க வேண்டும்; இனப் பிரச்சனை எழாமல், சூழலை மோசமாக்காமல், சுமூகமான முறையில் அதற்குத் தீர்வுகாண, சிலாங்கூர் மந்திரி பெசார் அனைத்து தரப்பினரையும் அழைக்க உள்ளார்.

“வேதமூர்த்தியின் அமைச்சர் பதவி, அது பிரதமரின் அதிகாரத்திற்கும் விருப்பத்திற்கும் உட்பட்டது,” என்று இன்று டாமான்சாராவில், செய்தியாளர்களிடம் அன்வார் தெரிவித்தார்.