24 மணித்தியாலத்துக்குள் விடுதலைப்புலிகள் தொடர்பில் நிகழவுள்ள மற்றொரு அதிர்ச்சி !

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் தலைவர் ஒருவர் தீட்டிய படுகொலைச் சதியின் விபரங்களை இன்னும் 24 மணி நேரங்களில் வெளியிடப் போவதாக நாமல் குமார சற்றும் முன்னர் தெரிவித்துள்ளார்.

குறித்த தகவல் மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் ஒருவர் படுகொலைச் சதியினைத் தீட்டியதாகவும் அது தொடர்பான அதிர்ச்சி தகவல்களை 24 மணித்தியாலங்களுக்குள் வெளியிடவுள்ளதாகவும் நாமல் தெரிவித்தார்.

சிறி லங்காவில் ஏற்பட்ட ஆட்சிக் குழப்பத்தில் நாமல் குமாரவின் பங்களிப்பும் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக ஜனாதிபதி கொலைச் சதி விபரத்தை நாமல் குமார பரபரப்புடன் வெளியிட்டதன் பின்னரே இந்த மாற்றங்கள் உருவானதாக கூறப்பட்டுள்ளது.

-eelamnews.co.uk

TAGS: