அமெரிக்கா இலங்கை மீது மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவின் மில்லேனியம் செலன்ஞ் கூட்டுத்தாபத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த பாரிய அன்பளிப்புத் தொகையொன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஹர்ஷ டீ சில்வா தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் வெளிநாடொன்றிலிருந்து மீள் செலுத்தல் அற்ற முறையில் வழங்கப்படவிருந்த பாரிய அன்பளிப்புத் தொகையாக இது அமைந்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் காரணமாக இந்த அன்பளிப்புத் தொகை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஹர்ஷ டீ சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

-eelamnews.co.uk

TAGS: